Wednesday, August 15, 2007

தலைவியின் பிரிவாற்றாமை.

வேதனை மிகுந்ததடி தோழி - வேங்கை
மடி தேடி மனமோடி விழி நீரோடி
சோதனைக் காலமடி தோழி - துயர்
சூழ் கொள்ளும் இதயம் வாடி
சாதனைகள் பல தானடி தோழி - எனைச்
சாய்த்துவிட்டதுமொரு வகையில் போடி
கோதையெனை யணைக்க தோழி - உன்
கொண்ணன் வருவானோடி யோடி?

எத்தனை இரவுக ளின்னும் - இங்கு
மெத்தையில் தீ பொறுத்திருப்பேன்
மெத்தனமான தேனடி யென் எண்ணம் - காதல்
வித்தை வினையானதே னிங்கின்னும்
உத்தமன் தானடி யெனினும் - என்
னுயிர் கருகுவது கண்டிலந்
இத்தனை துயர் தான் காதலெனில் - ஈங்
கெனக் கீதேனடி தோழி?

தோழி கூற்று:

வேதனை தகர்த்துவிடு தோழி - வீரனை
வரித்த மனதுனது வாழி!
பாதகர் சூx எல்லையதில் - அவன்
பாதுகாவலனடி பலரோடு!
பேதமை துற நெஞ்சே - சகி நீ
பெருமையுற வேறென வேணும் இஞ்சை?
காதலருமை தானடி கண்மணியே - ஆயினும்
கரிசல் உயிருனுமேலடி பொன்மணியே!

தலைவி கூற்று:

செத்து மடிந்தார் பலரென் னுறவில் - என்
சேமிப்பின் எச்சம் இவன் மட்டும் நெஞ்சில்
சொத்தென்றி வன் மட்டும் கொண்டேன்
போர் சேவைக்குள் புகுந்து கொண்டான்
வித்தகமறியாதது என்னறிவு - வீர
விளையாட்டிலெனை மறந்ததென் உறவு
கொத்தடிமையான தென் தேசம் - மீட்டுக்
கொண்டு வருவானோடி யென் நேசன்?

தோழி கூற்று:

வீதிகள் சமைத்து வைத்தோமடி - எம்
வேதகம் சூழ் தேசம் செழிக்க
விதிகள்போட்ட அன்னியம் பாரடி - எமை
வேலிக்குள் முடக்க நினைக்குதந்த சன்னியம்
புத்டி முடக்கி வாய் பொத்தியிருப்போமோடி - நாம்
புலிகளா இல்லை பகடைகளா
சாதிக்கும் சாதிகளுடன் உன் சகாயன் - சடுதியில்
சாதித்து வருவானடி தமிழீழம்!

No comments: